தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 11ல் ஆர்ப்பாட்டம்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 11ல் ஆர்ப்பாட்டம்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 11ல் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 05, 2024 10:40 PM
சென்னை:தமிழக தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, 'டிட்டோஜாக்' அறிக்கை:
அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான, 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், கடந்த அக்., 13ல் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.
அதில், 12 கோரிக்கைகளை ஏற்று, நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது; இன்னும் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்த கோரிக்கைகளை முன்னிறுத்தி, வரும் 11ம் தேதி, மாநிலம் முழுதும் வட்டார கல்வி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.