'பணிக்கொடை' பிடித்தம் செய்யும் ஆண்டுகளை குறைக்காததால் வருத்தம்; அரசு மீது ஓய்வூதியர்கள் அதிருப்தி
'பணிக்கொடை' பிடித்தம் செய்யும் ஆண்டுகளை குறைக்காததால் வருத்தம்; அரசு மீது ஓய்வூதியர்கள் அதிருப்தி
'பணிக்கொடை' பிடித்தம் செய்யும் ஆண்டுகளை குறைக்காததால் வருத்தம்; அரசு மீது ஓய்வூதியர்கள் அதிருப்தி
வட்டிவீதம் குறைவு
இதனை திரும்பப் பெறும் காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 10 ஆக குறைக்க வேண்டும் என ஓய்வூதியர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். பல ஆண்டு களுக்கு முன் பி.எப்., அமைப்பு முதல் வங்கிகள் வரை வட்டிவீதம் அதிகளவில் இருந்தது.இதனால் 15 ஆண்டுகளாக பிடித்தம் செய்யப்பட்டது. தற்காலத்தில் வட்டிவீதம் குறைந்துவிட்டதால் 10 ஆண்டுகளில் பிடித்தம் செய்யலாம். எனவே குறைக்க வலியுறுத்துகின்றனர்.
அரசு மீது அதிருப்தி
70 வயதை தாண்டியவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும் என தேர்தலின் போது தி.மு.க.,வினர் உறுதி கூறினர். தமிழகத்தில் உள்ள ஓய்வூதியர்களில் 70 வயது முடித்தவர்கள் 70 ஆயிரம் பேர் வரை இருப்பர். அவர்களுக்கு இந்த சலுகை அளிப்பதால் அதிக செலவு வராது. இதுகுறித்து ஆட்சிக்கு வந்தபின் அவர்கள் அழைத்துக்கூட பேசவில்லை. அடுத்து சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் ரூ.2 ஆயிரம் கிடைக்கிறது. அவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7850 வழங்க வேண்டும். இவை தொடர்பாக அரசு அழைத்துப் பேச வேண்டும். இல்லையெனில் ஜூன் 10ல் நடைபெறும் மாநில செயற்குழு கூட்டத்தில் போராட்ட முடிவை எடுப்போம்.


