ADDED : செப் 12, 2025 08:03 AM
வடலுார்; கடலுார் மாவட்டம், வடலுார் அடுத்த ஆபத்தாரணபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 35; நெய்வேலி என.எல்.சி., சுரங்கத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்தார்.
நேற்று முன்தினம் குறிஞ்சிப்பாடி சென்று, பைக்கில் வீடு திரும்பினார். வடலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே வந்தபோது, எதிரே வந்த தனியார் பஸ் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிவக்குமார் இறந்தார். வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.