முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நவீன் பட்நாயக்: 25 ஆண்டு ஆட்சி ‛‛பணால்''
முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நவீன் பட்நாயக்: 25 ஆண்டு ஆட்சி ‛‛பணால்''
முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நவீன் பட்நாயக்: 25 ஆண்டு ஆட்சி ‛‛பணால்''
ADDED : ஜூன் 05, 2024 12:25 PM

புவனேஸ்வர்: ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து, இன்று(ஜூன் 05) முதல்வர் பதவியை நவீன் பட்நாயக் ராஜினாமா செய்தார். அவரது 25 ஆண்டு கால ஆட்சியை பா.ஜ., முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
ஒடிசாவின் முதல்வராக, பிஜு ஜனதா தளத்தின் தலைவர் நவீன் பட்நாயக் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தார். சமீபத்தில் 4 கட்டகளாக நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணி, நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.மொத்தமுள்ள 147 சட்டசபை தொகுதிகளில் பா.ஜ., 78 இடங்களிலும், பிஜு ஜனதா தளம் 51 இடங்களிலும், காங்., 14 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
இதன் வாயிலாக கடந்த 25 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்த பிஜு ஜனதா தளத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து, முதல்வர் பதவியை இன்று(ஜூன் 05) நவீன் பட்நாயக் ராஜினாமா செய்தார். கவர்னர் ரகுபர் தாஸை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். கடந்த 2000ம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முறை முதல்வராக இருந்து வந்த நவீன் பட்நாயக்கின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அவரது தொண்டர்களை கவலை அடைய செய்துள்ளது.