Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தமிழகத்தில் தற்கொலைகள் குறைவு அமைச்சர் சுப்பிரமணியன் பெருமிதம்

தமிழகத்தில் தற்கொலைகள் குறைவு அமைச்சர் சுப்பிரமணியன் பெருமிதம்

தமிழகத்தில் தற்கொலைகள் குறைவு அமைச்சர் சுப்பிரமணியன் பெருமிதம்

தமிழகத்தில் தற்கொலைகள் குறைவு அமைச்சர் சுப்பிரமணியன் பெருமிதம்

ADDED : செப் 15, 2025 03:03 AM


Google News
Latest Tamil News
சென்னை: “தமிழகத்தில் அரசின் பல்வேறு நடவடிக்கையால், தற்கொலை செய்வோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது,” என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை எலியட்ஸ் கடற்கரையில், 'உலக தற்கொலை தடுப்பு வாரம்' விழிப்புணர்வு நிகழ்ச்சியில், அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்றார். அப்போது, அவர் அளித்த பேட்டி:

விற்பனைக்கு தடை தமிழகத்தில் அதிகபட்சமாக, 2021ம் ஆண்டில், கொரோனா காலத்தில், 19,000 பேர் வரை தற்கொலை செய்து கொண்டனர். அப்போது, தொழிலில் தோல்வி, கல்வி கற்க இயலாமை, வறுமை போன்ற காரணங்களால், தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்தது.

அதைத் தொடர்ந்து, தற்கொலையை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, சானிப்பவுடர், எலி மருந்து ஆகியவற்றின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது .

தற்கொலை செய்து கொள்வோரில், பெரும்பாலானோர் 19 முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருந்ததால், 'மனம்' என்ற மனநல சேவைகள் அமைப்பு துவக்கப்பட்டது .

இதன் வாயிலாக, மருத்துவம், பொறியியல் மற்றும் கலை கல்லுாரி மாணவர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஆலோசனை அத்துடன், 'நட்புடன் உங்களோடு' என்ற மனநல சேவை எண் '14416' வாயிலாகவும், மன ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளில், 1.50 லட்சம் பேர் தொடர்பு கொண்டு பயன் பெற்றுள்ளனர். 'நீட்' தேர்வு, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்ச்சி பெறாத மாணவர்கள் என, அனைவருக்கும் மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக, 2021க்கு பின், தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us