Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 8 பேர் உயிரிழப்பு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 8 பேர் உயிரிழப்பு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 8 பேர் உயிரிழப்பு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 8 பேர் உயிரிழப்பு

UPDATED : ஜூலை 01, 2025 05:33 PMADDED : ஜூலை 01, 2025 10:04 AM


Google News
Latest Tamil News
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்னகாமன் பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று (ஜூலை 01) தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 அறைகள் தரைமட்டமாகின.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்தில் தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மருத்துவமனை முன்பு குவிந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

ரூ. 4 லட்சம் நிதியுதவி

பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 4லட்சமும், காயமடைந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு ரூ.1 லட்சமும் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us