ராமதூதனே! அஞ்சனை மைந்தனே! எங்களுக்கு அருள் செய்வாயாக! இன்று (ஜன. 11, 2024) - அனுமன் ஜெயந்தி
ராமதூதனே! அஞ்சனை மைந்தனே! எங்களுக்கு அருள் செய்வாயாக! இன்று (ஜன. 11, 2024) - அனுமன் ஜெயந்தி
ராமதூதனே! அஞ்சனை மைந்தனே! எங்களுக்கு அருள் செய்வாயாக! இன்று (ஜன. 11, 2024) - அனுமன் ஜெயந்தி

அவதரித்தார் அனுமன்
குஞ்சரன் என்பவர் குழந்தை வேண்டி தவம் இருந்தார். பலனாக அங்கு தோன்றிய சிவபெருமான், 'நல்ல குணம் கொண்ட மகள் உனக்குப் பிறப்பாள். அவளுக்குப் பிறக்கும் மகன் எனது அம்சமாகத் தோன்றுவான். அவன் வலிமையும், வீரமும் கொண்டு சிரஞ்சீவியாக வாழ்வான். உலகமே கொண்டாடும் விதத்தில் அவனது செயல் அமையும்' என்று வரத்தை கொடுத்தார்.
தாரகமந்திரம்
அனுமன் ஜெயந்தியன்று விரதம் இருந்தால் வேண்டிய வரத்தை பெறலாம். அன்று பெருமாள், அனுமனை தரிசியுங்கள். 'ஸ்ரீராமஜெயம்' என்னும் தாரகமந்திரத்தை 108, அல்லது 1008 முறை எழுதுங்கள். பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர் போன்றவைகளை நைவேத்தியமாக படையுங்கள். பின் மாலையில் மீண்டும் கோயிலுக்கு சென்று பெருமாள், அனுமனுக்கு துளசி, வெற்றிலை மாலையை சாத்துங்கள்.
வெற்றிக்கான ஸ்லோகம்
போட்டி என்றால் ஒருவருக்கு வெற்றியும், தோல்வியும் வரும். அதாவது ஒருவர் பெறும் வெற்றியே மற்றொருவருக்கு தோல்வியாக மாறுகிறது. இந்த வெற்றியாளராக திகழ வேண்டும் என்றால் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்கள்.
வாழ்க்கை இனிக்க...
அனுமனைப்பற்றிய துதிகளில் மிகவும் முக்கியமானது கவிச்சக்கரவர்த்தியான கம்பர் கொடுத்ததாகும். அதை சொல்வோருக்கு வாழ்க்கையே இனிப்பாகும்.
குருவருள் பெறுவோம்
குருவின் அருள் இருந்தால் திருவாகிய கடவுளின் அருள் தானாகவே கிடைக்கும். மந்த்ராலய மகானாகிய ராகவேந்திரர் ஸ்வாமி அருளிய மந்திரத்தை படித்தால் ஒருவரது தீயவினைகள் போகும். ராகவேந்திரர், அனுமன், ஸ்ரீராமர், சீதை, லட்சுமணர் ஆகியோரது ஆசியையும் பெறலாம்.