'தினமலர்' நாளிதழ் ஆசிரியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: அமெரிக்க உலக தமிழ் பல்கலை வழங்கியது
'தினமலர்' நாளிதழ் ஆசிரியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: அமெரிக்க உலக தமிழ் பல்கலை வழங்கியது
'தினமலர்' நாளிதழ் ஆசிரியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: அமெரிக்க உலக தமிழ் பல்கலை வழங்கியது

முனைவர் பட்டம்
அதில், 'தினமலர்' நாளிதழ், 'வாரமலர்' இணைப்பிதழின் ஆசிரியர் கி.ராமசுப்பு, மகப்பேறு டாக்டர் தாமரை ஹரிபாபு ஆகியோருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.
விருதுகளை வழங்கி, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் பேசியதாவது:
உலகத் தமிழ் பல்கலையை, ஷெல்வினுக்கு பின், அதன் இந்திய தலைவராக உள்ள எஸ்.பி.பெருமாள்ஜி நிர்வகித்து வரும் நிலையில், மிகவும் தகுதி உடையோருக்கு, விருதுகளையும், மதிப்புறு முனைவர் பட்டங்களையும் வழங்கி இருப்பது சிறப்பு. முக்கியமாக, தமிழ் நாளிதழ்களில், சிறப்பாக சேவை செய்து வரும், 'தினமலர்' நாளிதழின் ஆசிரியர் கி.ராமசுப்புவுக்கும், 50,000க்கும் மேற்பட்டோருக்கு பிரசவம் பார்த்துள்ள, மகப்பேறு மருத்துவர் தாமரை ஹரிபாபுவுக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
'மணிமேகலை' பிரசுரத்தின் நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன் பேசியதாவது:
தமிழில் மக்கள் பிரச்னைகளின் குரலாகவே வெளிவரும், 'தினமலர்' நாளிதழின் ஆசிரியரான கி.ராமசுப்பு, வாரமலர் இணைப்பிதழின் ஆசிரியராகவும் உள்ளார். அவர் எந்த இடத்திலும் தன்னை முகம் காட்டி முன்நிறுத்திக் கொள்ளாத பண்பாளர்.
ஒற்றுமை உள்ளது
இன்று வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெறுவதிலும், அதைக் கடைப்பிடித்துள்ளார். அவருக்கு பதில், தன் நிறுவனத்தில் 40 ஆண்டுகளாக, மக்கள் தொடர்பு அதிகாரியாக உள்ள கல்பலதாவை அனுப்பி உள்ளார். அவருக்கும், மகப்பேறு மருத்துவர் தாமரை ஹரிபாபுவுக்கும் வாழ்த்துகள். இவ்வாறு அவர் பேசினார்.
விருதாளர் சார்பில், டாக்டர் தாமரை ஹரிபாபு பேசியதாவது:
மலர்களில் தாமரை ஒன்றுதான், பூலோகத்திலும், தேவலோகத்திலும் உள்ள மலராக குறிப்பிடப்படுகிறது. அதனால், தாமரையின் மகத்துவம் பெரியது. அந்த வகையில், இன்று விருதுபெறும் நானும் தாமரை; 'தினமலர்' பத்திரிகையின் 'லோகோ'வும் தாமரை என்பதில் ஒற்றுமை உள்ளது.