கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 20ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 20ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 20ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
ADDED : ஜூலை 16, 2024 10:08 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், காசிராமன் தெருவில் அமைந்திருந்த ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் துவக்கப் பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். உயிரிழந்த குழந்தைகளின் 20ம் ஆண்டு நினைவு தினம் இன்று (ஜூலை 16) அனுசரிக்கப்பட்டது.
பள்ளி முன்பு, குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் சார்பில் நினைவஞ்சலி கூட்டம் நடந்தது. பாலக்கரையில் உள்ள நினைவு மண்டபத்தில், பெற்றோர்கள், அரசியல் கட்சியினர்கள், பொதுமக்கள், பள்ளி முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இன்று மாலையில் மகாமக குளத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது.