Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தவறு செய்யவில்லை: ஜாமின் கேட்டு கிருஷ்ணா மனு

தவறு செய்யவில்லை: ஜாமின் கேட்டு கிருஷ்ணா மனு

தவறு செய்யவில்லை: ஜாமின் கேட்டு கிருஷ்ணா மனு

தவறு செய்யவில்லை: ஜாமின் கேட்டு கிருஷ்ணா மனு

ADDED : ஜூன் 27, 2025 05:52 PM


Google News
Latest Tamil News
சென்னை: போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணா ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

'கோகைன்' போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியதுடன், நண்பர்களுக்கும் கொடுத்த நடிகர் கிருஷ்ணாவும், அவருக்கு கோகைன் சப்ளை செய்த கெவின் என்பவரும் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் ஏற்கனவே நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில், சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் ஜாமின் கேட்டு கிருஷ்ணா மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், எனக்கு எதிராக உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தவில்லை. உள்நோக்கத்துடன் கைது செய்யப்பட்டு உள்ளேன். நான் தான் எந்த தவறும் செய்யவில்லை எனக்கூறப்பட்டு உள்ளது.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us