Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ கொங்கு மண்டலம் கொலைக்களத் தலைநகராகிறது: சீமான் வேதனை

கொங்கு மண்டலம் கொலைக்களத் தலைநகராகிறது: சீமான் வேதனை

கொங்கு மண்டலம் கொலைக்களத் தலைநகராகிறது: சீமான் வேதனை

கொங்கு மண்டலம் கொலைக்களத் தலைநகராகிறது: சீமான் வேதனை

ADDED : ஜூன் 10, 2025 12:50 PM


Google News
Latest Tamil News
சென்னை: ''கொடூர தி.மு.க., ஆட்சிக்கு கொலைக்களத் தலைநகராகும் கொங்கு மண்டலமே சாட்சி'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டி உள்ளார்.

அவரது அறிக்கை: நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டியில் தோட்டத்துவீட்டில் வசித்துவந்த மூதாட்டி சாமியாத்தாள் படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. தி.மு.க., ஆட்சியில் கொங்கு மாவட்டங்களில் தோட்டத்து வீடுகளில் முதியவர்களை குறிவைத்து அடுத்தடுத்து நடைபெறும் தொடர்படுகொலைகள் அதிர்ச்சி என்பதை தாண்டி அன்றாட நிகழ்வாகிவிட்டதுதான் கொடுந்துயரத்தின் உச்சம்.

ஒரே இடங்களில், ஒரே மாதிரியான படுகொலைகள், ஒரே வகையில் தொடர்ந்து நடைபெறுகின்றபோதும் கூட தடுக்க முடியவில்லை என்பது, தி.மு.க., ஆட்சியில் காவல்துறை எந்த அளவிற்கு செயலற்று போயுள்ளது என்பதையே காட்டுகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம், ஈரோடு மாவட்டம் சிவகிரி, தற்போது நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி என்று கொங்கு மண்டலத்தில் தொடரும் இக்கொடூரக் கொலைகள் தி.மு.க., ஆட்சியில் மக்கள் பாதுகாப்பாக வாழவே முடியாத பேராபத்தான சூழல் நிலவுவதையே உறுதிப்படுத்துகிறது.

முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துத்தரப்பு மக்களும் வெளியில் மட்டுமல்ல வீட்டில்கூட பாதுகாப்பாக வாழ முடியாத சூழல் நிலவுவது சட்டம் ஒழுங்கு சீரழிவின் மிக மோசமான நிலையாகும். அரசையோ, போலீசாரையோ நம்பி பயனில்லை, தி.மு.க., ஆட்சியில் மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்து கொள்வதைத்தவிர வேறு வழியில்லை எனும் கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது தான் நடைமுறை உண்மையாகும்.

மீதமிருக்கும் ஓராண்டு ஆட்சியில் இன்னும் எத்தனை கொடூரக்கொலைகள், பாலியல் வன்கொடுமைகளை தமிழக மக்கள் தாங்கிக்கொள்ள வேண்டுமோ என்று நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. தி.மு.க., ஆட்சி என்றாலே ரத்த வெள்ளத்தில் மக்கள் மிதக்கும் காட்சிதான் அனைவரின் நினைவுக்கும் வருமளவுக்கு படுகொலைகள் தங்கு தடையின்றி தொடர்ந்து அரங்கேறுகிறது.

கொலைவெறி கொடூரர்களின் கூடாரமாகிப்போன தமிழகத்தை மீட்க மக்களின் குருதியைக் குடிக்கும் தி.மு.க ஆட்சியை அகற்றி, மக்கள் நலனில் அக்கறை கொண்ட நல்லாட்சியை மலரச்செய்வது ஒன்றே ஒற்றை வாய்ப்பும், தீர்வுமாகும். இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us