Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கோடநாடு வழக்கு; வளர்ப்பு மகன் சுதாகரனிடம் விசாரணை

கோடநாடு வழக்கு; வளர்ப்பு மகன் சுதாகரனிடம் விசாரணை

கோடநாடு வழக்கு; வளர்ப்பு மகன் சுதாகரனிடம் விசாரணை

கோடநாடு வழக்கு; வளர்ப்பு மகன் சுதாகரனிடம் விசாரணை

ADDED : மார் 27, 2025 01:26 PM


Google News
Latest Tamil News
கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில், இன்று (மார்ச் 27) முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆஜரானார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இங்கு கடந்த, 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் உட்பட, 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி., போலீசார், 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இன்று ஆஜர் ஆகுமாறு ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

அதன்படி இன்று அவர் ஆஜரானார். சி.பி.சி.ஐ.டி., போலீசார் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில், 'கேட்ட கேள்விக்கு பதில் அளித்தேன்' என தெரிவித்தார். எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரர் என்ற முறையில் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us