Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கச்சத்தீவு திருவிழா; படகில் புறப்பட்டு சென்றனர் பக்தர்கள்!

கச்சத்தீவு திருவிழா; படகில் புறப்பட்டு சென்றனர் பக்தர்கள்!

கச்சத்தீவு திருவிழா; படகில் புறப்பட்டு சென்றனர் பக்தர்கள்!

கச்சத்தீவு திருவிழா; படகில் புறப்பட்டு சென்றனர் பக்தர்கள்!

ADDED : மார் 14, 2025 09:14 AM


Google News
Latest Tamil News
ராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவுக்கு, ராமேஸ்வரத்திலிருந்து பக்தர்கள் படகில் புறப்பட்டு சென்றனர். பக்தர்கள் உடைமைகளை போலீசார் சரி பார்த்து அனுப்பினர்.

கச்சத்தீவு புனித அந்தோணியார் சர்ச் திருவிழா மார்ச் 14, 15ல் நடக்கிறது. விழாவிற்கு தமிழகத்தில் இருந்து பக்தர்கள் செல்வது வழக்கம். இந்த ஆண்டு 82 விசைப்படகுகள், 23 நாட்டுப்படகுகளில் பயணிகள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன், இந்த படகுகளை ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளில் மீன் வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். படகுக்கான ஆவணங்கள், படகு கடலில் பயணிக்க தகுதியுள்ளதா, படகில் பொருத்தப்பட்டுள்ள இயந்திரம் நல்ல நிலையில் இயங்குகிறதா, படகுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளதா போன்ற விபரங்களை ஆய்வு செய்து தகுதி சான்று வழங்கினர்.

இந்நிலையில் இன்று (மார்ச் 14) கச்சத்தீவு திருவிழா கோலாகலமாக துவங்கியது. காலை முதல் ராமேஸ்வரத்திலிருந்து பக்தர்கள் படகில் புறப்பட்டு சென்றனர். பக்தர்கள் உடைமைகளை போலீசார் சரி பார்த்து அனுப்பினர். ஒரு விசைப்படகில் 40 பேர் வீதமும், ஒரு நாட்டுப்படகில் 18 பேர் வீதமும் பயணம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us