நீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை
நீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை
நீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை

அவமதிப்பு வழக்கு
இதனையடுத்து, திருப்பரங்குன்றம் மலையில் பிற பகுதிகளை போல பழைய தீபத் தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவை நிறைவேற்றவில்லை என மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
தள்ளுமுள்ளு
நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை என்பதால் கோவில் முன் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அங்கு திரண்டிருந்த இந்து முன்னணி அமைப்பினர் மலை உச்சிக்கு செல்ல முயன்றனர். தடுத்த போலீசாருக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 2 போலீசார் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து அங்கு போராட்டத்திலும் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
144 தடை உத்தரவு
இந்து அமைப்புகளின் போராட்டத்தைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்னை தீரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட கலெக்டர் பிரவின் குமார் அறிவித்துள்ளார்.
காத்திருப்பு
இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியில் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற திருப்பரங்குன்றம் சென்றுள்ளனர். பாதுகாப்புக்காக சிஐஎஸ்எப் போலீசார் வருவதற்காக அவர்கள் அங்கு காத்திருந்தனர்.
சிஐஎஸ்எப் வீரர்களுடன் போலீஸ் கமிஷனர் பேச்சுவார்த்தை
நீதிமன்ற உத்தரவுப்படி, பாதுகாப்புக்கு வந்த சிஐஎஸ்எப் வீரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 144 தடை உத்தரவு உள்ளதாலும் அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாலும் மலைக்கு செல்ல அனுமதிக்க முடியாது என போலீஸ் கமிஷனர் கூறினார்.
நாளை விசாரணை
இந்நிலையில், நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட் கிளை நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு அரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, நாளை( டிச.,13) தமிழக அரசின் முறையீட்டை முதல் வழக்காக விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.
சூடம் ஏற்றி வழிபாடு
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்வதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், மலைப்பாதையில் சூடம் ஏற்றி வழிபட்ட மனுதாரர் ராம ரவிக்குமார், ' நாளை கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறேன்' என்று கூறி புறப்பட்டு சென்றார்.


