Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ராமதாசுக்கு இப்படியொரு சோதனையா? ஜி.கே.மணி வேதனை

ராமதாசுக்கு இப்படியொரு சோதனையா? ஜி.கே.மணி வேதனை

ராமதாசுக்கு இப்படியொரு சோதனையா? ஜி.கே.மணி வேதனை

ராமதாசுக்கு இப்படியொரு சோதனையா? ஜி.கே.மணி வேதனை

ADDED : அக் 15, 2025 01:51 AM


Google News
Latest Tamil News
சென்னை:''ராமதாசுக்கு இப்படி ஒரு சோதனை வந்துள்ளது, எங்களுக்கு வேதனையாக உள்ளது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது,'' என, பா.ம.க., - எம்.எல்.ஏ., ஜி.கே.மணி கூறினார்.

அவர் அளித்த பேட்டி:

ராமதாஸ் வாழும் காலத்தில், கட்சிக்கு இப்படி ஒரு சோதனை வந்துள்ளது, எங்களுக்கெல்லாம் அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

கடந்த, 45 ஆண்டுகளாக அவருடன் பயணம் செய்கிறேன். ஒற்றுமையாகவும், வலிமையாகவும் கட்சியை நடத்தினோம்.

ராமதாசிற்கு இப்படி ஒரு சோதனை வந்துள்ளது; இது எங்களுக்கு வேதனையாக உள்ளது; மிகவும் துரதிருஷ்டவசமானது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; ஒற்றுமை நீங்கினால், அனைவருக்கும் தாழ்வு. இது, எல்லாருக்கும் பொருந்தும். எல்லா கட்சிகளிலும் பிரச்னைகள் வரும்.

அப்படி வந்தாலும், கூட ஒற்றுமையாக இருக்க வேண்டும். எப்படி இருந்தாலும், பா.ம.க.,விற்கு ஐந்து எம்.எல்.ஏ.,க்களை நியமித்து, பொறுப்புகளை வழங்கியவர் ராமதாஸ்.

கட்சியை துவங்கியவர் அவர் தான்; அவருக்கு தான் முழு அதிகாரம் உள்ளது. அவரது வழியில் நாங்கள் பயணிக்கிறோம்.

பா.ம.க., ஒற்றுமையாக இல்லாவிட்டால் பலவீனம் தான். ஐந்து ஆண்டுகள் முடியப்போகிறது; இனி என் பதவியை பறித்து என்ன நடக்கப் போகிறது?

ராமதாஸ் செய்த நியமனம் மட்டுமே சரியாக இருக்கும். நியாயமும், தர்மமும், சத்தியமும், நீதியும் அதுதான். மூன்று எம்.எல்.ஏ.,க்கள் தர்ணாவில் ஈடுபட்டது, அவர்களது விருப்பம்.

இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us