267 கிலோ தங்கம் கடத்தலில் சர்வதேச தொடர்பு: விரிவடைகிறது விசாரணை வளையம்
267 கிலோ தங்கம் கடத்தலில் சர்வதேச தொடர்பு: விரிவடைகிறது விசாரணை வளையம்
267 கிலோ தங்கம் கடத்தலில் சர்வதேச தொடர்பு: விரிவடைகிறது விசாரணை வளையம்

விசாரணை வளையத்தில் பிரித்வி
கடத்தல் பின்னணியில் பிரித்வி உள்ளார். தங்கக் கட்டிகள் கடத்துவதற்காக, சபீர் அலிக்கு அவர் கடை நடத்த உரிமம் பெற்றுத் தந்துள்ளார் எனக் கூறப்படும் நிலையில், அதை பிரித்வி மறுத்துள்ளார். ஆனாலும் அவர், சுங்கத்துறை மற்றும் சி.பி.ஐ., விசாரணை வளையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளார். சென்னை பாரிமுனையில், காளிகாம்பாள் கோவில் அருகே அவரது வீடு உள்ளது. பிரித்வியுடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்தும் விசாரணை நடக்கிறது.
கடைகளில் சோதனை
சென்னை சர்வதேச விமான நிலையத்தில், சபீர் அலியின் கடையில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, மேலும் இரண்டு கடைகளில் நேற்று சோதனை செய்தனர். கடத்தல் கும்பல் பின்னணி மற்றும் அதில் தொடர்புடைய நபர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என, சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடத்தல் நடந்தது எப்படி
வெளிநாடுகளில் இருந்து, தங்கக் கட்டிகள் கடத்தி வரும் டிரான்சிட் பயணியர், சென்னை விமான நிலைய கழிப்பறைக்கு செல்வர். அவர்களை பின்தொடர்ந்து சபீர் அலி கடை ஊழியர்களும் செல்வர். கழிப்பறையில் தங்கக் கட்டிகள் கைமாற்றப்படும். சபீர் அலி கடை ஊழியர்கள், அதை ஆடையில் மறைத்து வெளியே எடுத்து வருவர்.