Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நிலவுக்கு இந்தியர் பயணிக்கும் திட்டம் 2040ல் நிறைவேறும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி

நிலவுக்கு இந்தியர் பயணிக்கும் திட்டம் 2040ல் நிறைவேறும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி

நிலவுக்கு இந்தியர் பயணிக்கும் திட்டம் 2040ல் நிறைவேறும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி

நிலவுக்கு இந்தியர் பயணிக்கும் திட்டம் 2040ல் நிறைவேறும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி

UPDATED : மே 13, 2025 07:09 PMADDED : மே 13, 2025 07:00 PM


Google News
Latest Tamil News
தேனி: ''மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தின் ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த திட்டம் 2040ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும்,'' என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

இது தொடர்பாக நிருபர்களுக்கு நாராயணன் அளித்த பேட்டி: சந்திரயான் 5 திட்டம், சந்திரயான் 3 போல் ஒரு லேண்டர். இது 100 நாட்கள் நிலவில் ஆய்வு செய்யும் வகையில் உருவாக்கப்படுகிறது. மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தின் ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த திட்டம் 2040ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும்.

இஸ்ரோவின் மூன்றாவது ஏவுதள மையம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்க உள்ளோம். இரண்டாவது ஏவு தளம் மையம் குலசேகரபட்டினத்தில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 95% இடங்களை தமிழக அரசு ஒதுக்கி தந்து விட்டது. வரும் 2026ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படும். இவ்வாறு நாராயணன் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us