'இண்டியா' கூட்டணி நாட்டை வழிநடத்தும் பணியை மேற்கொள்ளும்: முதல்வர் ஸ்டாலின்
'இண்டியா' கூட்டணி நாட்டை வழிநடத்தும் பணியை மேற்கொள்ளும்: முதல்வர் ஸ்டாலின்
'இண்டியா' கூட்டணி நாட்டை வழிநடத்தும் பணியை மேற்கொள்ளும்: முதல்வர் ஸ்டாலின்

மக்களுக்கு நம்பிக்கையில்லை
நாடே திரும்பிப் பார்க்கும் வகையிலான நாற்பதுக்கு நாற்பது என்ற இந்த வெற்றி, இந்திய அரசியலின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மத்திய ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை என்பதைத்தான் தனிப்பெரும்பான்மை பெற முடியாத பா.ஜ.,வின் சரிவு காட்டுகிறது. அவர்களின் கோட்டை என நினைத்திருந்த மாநிலங்களில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பார்லிமென்டில் சரிக்குச் சரியாக இண்டியா கூட்டணியின் உறுப்பினர்கள் இடம் பெறவிருப்பது ஜனநாயகம் கட்டிக் காக்கப்பட்டிருப்பதன் அடையாளமாகும்.
நாட்டை வழிநடத்தும் பணி
சர்வாதிகாரத்தனமான ஒற்றையாட்சி முறைக்கு மக்கள் ஆதரவாக இல்லை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. தமிழகத்திலும் இந்திய அளவிலும் நமது கூட்டணி பெற்றுள்ள வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் நம்பிக்கைத் துளிர்கள் அரும்பியுள்ளன. அரசியலமைப்பு வழங்கியுள்ள நெறிமுறைகளைப் பாதுகாக்கின்ற வகையில், நாட்டை வழிநடத்தும் பணியை இண்டியா கூட்டணி மேற்கொள்ளும். அதற்கு நாற்பதுக்கு நாற்பது என்ற மகத்தான வெற்றி பெருந்துணையாக இருக்கும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.