சிறுபான்மையினர் பிரச்னை என்றால் ‛‛ஆக்டிவ் மோடு'', தமிழக பிரச்னைனா ‛‛கோமா மோடு'': சினிமா போராளிகளின் ‛‛டபுள் ஆக்ட் பாலிடிக்ஸ்''
சிறுபான்மையினர் பிரச்னை என்றால் ‛‛ஆக்டிவ் மோடு'', தமிழக பிரச்னைனா ‛‛கோமா மோடு'': சினிமா போராளிகளின் ‛‛டபுள் ஆக்ட் பாலிடிக்ஸ்''
சிறுபான்மையினர் பிரச்னை என்றால் ‛‛ஆக்டிவ் மோடு'', தமிழக பிரச்னைனா ‛‛கோமா மோடு'': சினிமா போராளிகளின் ‛‛டபுள் ஆக்ட் பாலிடிக்ஸ்''

உண்மை என்ன:
உண்மையில் போரை நிறுத்த வேண்டும் என்று தான் பிரதமர் மோடியும் வலியுறுத்துகிறார். ஏதோ இந்தியா இஸ்ரேலுக்கு துணை போவது போன்றும், பாலஸ்தீன நாட்டுக்கு துரோகம் செய்வது போன்றும் இவர்களின் பேச்சு இருந்தது. பிரதமராக மோடி பதவியேற்ற இத்தனை ஆண்டுகளில் பாலஸ்தீன நாட்டிற்கு நிதி உதவி, உள் கட்டமைப்பு உள்ளிட்ட பல விஷயங்களுக்கு அதிகம் உதவி செய்யப்பட்டுள்ளன.
அதிக நிதி
கடந்த ஓராண்டுகளில் மட்டும் இந்தியா சார்பில் அந்நாட்டிற்கு உள் கட்டமைப்பு, ஐடி டெக் பார்க், மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு 141 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி அளித்துள்ளது. மேலும் பாலஸ்தீனத்திற்கு உதவும் ஐக்கிய நாடுகளின் நிதி அமைப்பிற்கு ஆண்டுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை 2018 முதல் இந்தியா வழங்கி வருகிறது.

மோடிக்கு கவுரவம்
1980ல் இந்தியாவில் பாலஸ்தீன நாட்டிற்கு டில்லியில் தூதரகம் துவங்கப்பட்டது. அதன்பின் இந்தியாவில் பல பிரதமர்கள் பதவி வகித்தனர். அவர்கள் யாருக்கும் கிடைக்காத பாலஸ்தீன நாட்டின் உயரிய விருது 2018ல் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு வழங்கி கவுரவித்தது. இந்த விருதை வென்ற முதல் இந்திய பிரதமர் மற்றும் அந்நாட்டிற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி மோடியின் உதவியை பாராட்டி அந்நாட்டு அரசு கவுரவித்த நிலையில் அது கூட தெரியாமல் மோடியை குற்றம் சொல்கிறார்கள் பிராஷ்ராஜ், அமீர் போன்றோர். இப்படிப்பட்டவர்களை அழைத்து மேடையில் பேச வைத்திருக்கின்றனர். கொடைக்கானலில் வனத்திற்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக வீடு கட்டியவர் இந்த பிரகாஷ்ராஜ். அவர் ஏதோ உத்தமர் போல பேசுகிறார்.
