பிராமணர்களுக்கு எதிராக திரிக்கப்பட்ட கட்டுக்கதைகள்: எச்.ராஜா ஆவேசம்
பிராமணர்களுக்கு எதிராக திரிக்கப்பட்ட கட்டுக்கதைகள்: எச்.ராஜா ஆவேசம்
பிராமணர்களுக்கு எதிராக திரிக்கப்பட்ட கட்டுக்கதைகள்: எச்.ராஜா ஆவேசம்

முக்கிய பங்கு
'வீடியோ கான்பரன்ஸ்' வழியே விழாவை துவக்கி வைத்து, காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசுகையில், ''இன்று மக்கள், அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்னைகளால் திசை திருப்பப்பட்டு உள்ளனர். வரலாறு திரிக்கப்படுகிறது. தேசத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் நம்மிடம் உள்ளது. எனவே, உண்மையான வரலாற்றுப் பிரசாரத்தை, மக்களிடம் இளைஞர்கள் கொண்டு செல்வது அவசியம்,'' என்றார்.
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா பேசியதாவது:
தமிழகத்தில் மட்டும் தான் 150 ஆண்டுகளாக பிராமணர் எதிர்ப்பு இருந்து வருகிறது. இது, வேறு எங்கும் கிடையாது. பிராமணர் என்ற கட்டமைப்பை உடைக்காமல், ஹிந்துக்களை மத மாற்றம் செய்ய முடியாது என்பதை கிறிஸ்துவ மிஷனரிகள் உணர்ந்தன. அதனால், பிராமணர்களுக்கு எதிராக பல கட்டுக்கதைகளை திரித்து கூறினர். கால்டுவெல்லின் இழிவான புத்தியில் இருந்து வந்தது தான், ஆரியம், திராவிடம் என்ற வார்த்தை.
விமர்சனம்
என்னை சனீஸ்வரன் என விமர்சித்த சேகர்பாபு உள்ளிட்ட தப்பு செய்யும் யாரையும் தண்டிக்காமல் விடமாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.