பல ரவுடிகளை பார்த்துவிட்டு வந்திருக்கிறேன்; அண்ணாமலை
பல ரவுடிகளை பார்த்துவிட்டு வந்திருக்கிறேன்; அண்ணாமலை
பல ரவுடிகளை பார்த்துவிட்டு வந்திருக்கிறேன்; அண்ணாமலை

சாமானிய மனிதராக...!
அதைத் தாண்டி முதல்வரை சந்தித்து புகார் கொடுப்பேன் என்று சொல்கிறீர்கள். அதுவும் திருமாவளவன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் எனது பெயரை இழுத்து, நான்தான் இதற்குப் பின்னால் இருந்தேன் என்கிறார். அந்த டூவீலர் காரர் யார் என்று எனக்குத் தெரியாது. நான் சாமானிய மனிதராக குரல் கொடுக்கிறேன்.
நாகரிகமான அரசியல்
திருமாவளவன் இதனை எல்லாம் விட்டுவிட்டு, நாகரிகமான அரசியலுக்கு வர வேண்டும். இதுபோன்ற வெறுப்பு அரசியல், வன்முறை, மிரட்டுவது, ரோட்டில் செல்பவர்களை இடிப்பது, கேள்வி கேட்டால் அடிக்கப்போவது இது என்ன விதமான அரசியல்? இவர்கள் தமிழகத்தில் என்ன மாற்றத்தை கொடுக்கப் போகிறார்கள். இவர்களால் என்ன மாற்றம் நடக்கும்.
யாருக்கு லாபம்?
வன்முறை அரசியலால் யாருக்கு என்ன லாபம். அதற்கெல்லாம் நாங்கள் பயப்பட போவது கிடையாது. உங்களுக்கு தெரியும் என்னை பொறுத்தவரை ஒரு அடி கொடுத்தால், இரண்டு அடி கொடுப்பவன் நான். மற்றவர்கள் மாதிரி வாங்கிட்டு போகிற ஆளு நான் இல்லை. எதற்கும் நான் தயார் தான். வர வேண்டும் என்றால் வாருங்கள். அதனால் இந்த உருட்டல், மிரட்டல் எல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதீர்கள்.
ரோட்டில் வன்முறை
மிகத் தெளிவாக ரோட்டில் வன்முறை நடந்திருக்கிறது. உங்க கூட்டணியை சேர்ந்த எம்பி காரில் இருக்கிறார். அவர் சம்பவம் நடந்த இடத்தில், காரில் இருந்து இறங்குகிறார். சாமானிய மனிதருக்கு பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்றால், காவல்துறையின் அமைச்சராக இருக்கக்கூடிய முதல்வர் ஸ்டாலின் அந்தப் பதவியில் உட்கார வேண்டுமா?
வழக்கம்போல்...!
மேலும் அண்ணாமலை கூறியதாவது: கரூர் சம்பவம் குறித்து சட்டசபையில் இன்று பேசிய தமிழக முதல்வர் வழக்கம் போல் அரசின் மீது தவறு இல்லை. காவல் துறை மீது தவறு இல்லை என பேசியுள்ளார். வழக்கு சிபிஐயிடம் மாற்றப்பட்ட பின் முதல்வர் 606 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.


