Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஓசூரில் மேம்பால இணைப்பில் திடீர் விரிசல்; வாகன போக்குவரத்து நிறுத்தம்

ஓசூரில் மேம்பால இணைப்பில் திடீர் விரிசல்; வாகன போக்குவரத்து நிறுத்தம்

ஓசூரில் மேம்பால இணைப்பில் திடீர் விரிசல்; வாகன போக்குவரத்து நிறுத்தம்

ஓசூரில் மேம்பால இணைப்பில் திடீர் விரிசல்; வாகன போக்குவரத்து நிறுத்தம்

ADDED : ஜூன் 21, 2025 05:08 PM


Google News
Latest Tamil News
ஓசூர்; ஓசூரில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மைய பகுதியில் திடீரென ஏற்பட்ட விரிசல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு;

ஓசூர் பஸ் நிலையம் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் ஒன்று உள்ளது. இந்த மேம்பாலத்தின் மையப் பகுதியில் உள்ள இணைப்பில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது.

பிணைப்பு பகுதியில் இருந்து பாலம் முக்கால் அடி தூரம் விலகி விட்டது. இதன் காரணமாக, பாலத்தில் வாகன போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

அனைத்து வாகனங்களும் சர்வீஸ் ரோடு வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளன. 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பாலம் வழியாக நாளொன்றுக்கு 80 ஆயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us