Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ சீமை கருவேல மரங்கள் அகற்றும் விவகாரம் அரசு செயல்பாட்டில் ஐகோர்ட் அதிருப்தி

சீமை கருவேல மரங்கள் அகற்றும் விவகாரம் அரசு செயல்பாட்டில் ஐகோர்ட் அதிருப்தி

சீமை கருவேல மரங்கள் அகற்றும் விவகாரம் அரசு செயல்பாட்டில் ஐகோர்ட் அதிருப்தி

சீமை கருவேல மரங்கள் அகற்றும் விவகாரம் அரசு செயல்பாட்டில் ஐகோர்ட் அதிருப்தி

ADDED : மார் 26, 2025 12:37 AM


Google News
சென்னை:'சீமை கருவேல மரங்கள் அகற்றுவது தொடர்பாக, நீதிமன்றம் பிறப்பித்த எந்த உத்தரவையும் அமல்படுத்தவில்லை; மரங்களை அகற்ற பொதுமக்கள் பணத்தை பெருமளவில் அரசு செலவிட்டது அதிருப்தி அளிக்கிறது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடக் கோரி, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வனத்துறை சார்பில் சிறப்பு பிளீடர் டி.சீனிவாசன் ஆஜராகி, ''சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக, 37 மாவட்டங்களில் 738 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

அரசுக்கு வருவாய்


''கடந்த 2024 பிப்ரவரி முதல் கடந்த ஜனவரி வரை, சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு, 2 கோடி 37 லட்சத்து 71,000 ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, தலைமை செயலர் தலைமையில் கூட்டம் நடக்க உள்ளது,'' எனக்கூறி, அறிக்கை தாக்கல் செய்தார்.

அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:

சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு, பொதுமக்கள் பணத்தை பெருமளவில் செலவிட்டது ஏமாற்றம் அளிக்கிறது.

இந்த பணிகளை தனியாருக்கு வழங்கும்பட்சத்தில், அரசுக்கு வருவாய் கிடைக்கும். கடந்த, 2015ம் ஆண்டு முதல், சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக, இந்த நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இருப்பினும், எந்த உத்தரவும் இதுவரை அமல்படுத்தப்படவில்லை.

அமல்படுத்தவில்லை


சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக பொது ஏலம் விடும்படி, கடந்த 2022ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டும், அதையும் அமல்படுத்தவில்லை.

சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக, பொது ஏலம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படுமா என, அரசு ஏப்., 25க்குள் பதிலளிக்க வேண்டும்.

இவ்விவகாரத்தில் அரசு தகுந்த பதிலை அளிக்கத் தவறினால், நீதிமன்றமே பொது ஏலம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டிய வரும்.

நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாதது தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பவும் வேண்டி வரும்.

இவ்வாறு எச்சரித்த நீதிபதிகள், விசாரணையை ஏப்., 25ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us