Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ஐ.நா.,வில் சீர்திருத்தம் மேற்கொள்ள வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி 

ஐ.நா.,வில் சீர்திருத்தம் மேற்கொள்ள வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி 

ஐ.நா.,வில் சீர்திருத்தம் மேற்கொள்ள வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி 

ஐ.நா.,வில் சீர்திருத்தம் மேற்கொள்ள வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி 

ADDED : ஜூன் 25, 2025 03:34 AM


Google News
Latest Tamil News
மதுரை: ஐ.நா.,வில் சீர்திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

மன்னார்குடி அபிமானி 2109 ல் தாக்கல் செய்த பொதுநல மனு:ஐ.நா.,சபை அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ளது. இதன் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் நிரந்தர உறுப்பினர்களாக, 'வீட்டோ' அதிகாரத்துடன் உள்ளன.

இங்கிலாந்து, பிரான்ஸ் மிகக் குறைவான மக்கள் தொகை கொண்டவை. இந்திய மக்கள் தொகை 135 கோடி. உலக பொருளாதாரத்தில் இந்தியா 4 வது இடத்தில் உள்ளது.

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கவில்லை. அனைத்து நாடுகளையும் சமமாக கருத வேண்டும்.

நாடுகளின் மக்கள் தொகை, பொருளாதாரத்திற்கு ஏற்ப பாதுகாப்பு கவுன்சிலில் வாக்குரிமை அளிக்க வேண்டும்.

ஐ.நா.,வில் சீர்திருத்தம் மேற்கொள்ள மத்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு:

இவ்விவகாரம் இந்நீதிமன்ற அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது. மனுதாரர் தவறாக புரிந்து கொண்டு வழக்கு தாக்கல் செய்துள்ளார். தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us