நீலகிரியில் கனமழையால் 20 இடங்களில் மண் சரிவு; அணைகளில் நீர்மட்டம் உயர்வு
நீலகிரியில் கனமழையால் 20 இடங்களில் மண் சரிவு; அணைகளில் நீர்மட்டம் உயர்வு
நீலகிரியில் கனமழையால் 20 இடங்களில் மண் சரிவு; அணைகளில் நீர்மட்டம் உயர்வு

20 இடங்களில் மண் சரிவு!
கடந்த இரண்டு நாட்களாக இரவு பகலாக மழை பெய்து வருகிறது. நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஊட்டி-மஞ்சூர் சாலை, எடக்காடு, பிக்கட்டி, தங்காடு ஓரநள்ளி மற்றும் ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில், 20 இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
நீர் மட்டம் உயர்வு
அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா உள்ளிட்ட அணைகள் மின் உற்பத்தி மற்றும் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு முக்கிய அணையாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மேற்கண்ட பகுதிகளில் அதிகபட்சம் மழை பதிவாகி இருப்பதால், நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களில், 10 அடி வரை நீர் மட்டம் உயர்ந்துள்ளது. பிற அணைகளிலும் நீர் மட்டம், 5 அடி வரை உயர்ந்துள்ளது.
கோத்தகிரி சாலை
மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் குஞ்சப்பனை அருகே சாலையோரம் இருந்த மரம் ஒன்று முறிந்து கீழே சாலையில் விழுந்தது. இதனால் கோத்தகிரி சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.