Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பந்தலூரில் கொட்டி தீர்க்கும் கனமழை!

பந்தலூரில் கொட்டி தீர்க்கும் கனமழை!

பந்தலூரில் கொட்டி தீர்க்கும் கனமழை!

பந்தலூரில் கொட்டி தீர்க்கும் கனமழை!

ADDED : ஜூன் 25, 2025 12:41 PM


Google News
Latest Tamil News
பந்தலூர்: பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதிகளில், தொடர் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, கிணறுகளில் தண்ணீர் அளவு அதிகரித்து காணப்படுகிறது.

மேலும் முக்கிய நீரோடைகள், ஆறுகளில் தண்ணீர் வரத்தும் அதிகரித்து உள்ளது.

வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிரான காலநிலைக்கு மாறிவரும் நிலையில், மலைமுகடுகளில் புதிய அருவிகள் ஊற்றெடுக்க துவங்கி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதில் ஓவேலி மலைப்பகுதியில் சந்தனமலை செல்லும் சாலை ஓரம், முக்கூர்த்தி மலை முகடுகள், நிலம்பூர் வனப்பகுதி மலைகளில் அதிக அளவில் தண்ணீர் ஊற்றுகள் அதிகரித்து, வெள்ளி அருவிகளாக தண்ணீர் கொட்டி வருகிறது.

உள்ளூர் மக்கள் இதனை ரசிக்காவிட்டாலும், வெளியூர் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் தொலைதூரத்தில் காணப்படும் இந்த அருவிகளை பார்த்து ரசித்து செல்கின்றனர். அருவிகளில் தண்ணீர் கொட்டினாலும், அதனால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லாமல் அதிக அளவில் கேரளாவை நோக்கி தண்ணீர் பாய்வதால் பார்த்து ரசிக்க மட்டுமே முடியும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us