Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

ADDED : செப் 19, 2025 01:45 PM


Google News
Latest Tamil News
சென்னை: திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (செப் 19) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வரும் செப் 25ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்றும் (செப் 19), நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us