சிறுவனுக்கு தொந்தரவு இளைஞருக்கு சிறை
சிறுவனுக்கு தொந்தரவு இளைஞருக்கு சிறை
சிறுவனுக்கு தொந்தரவு இளைஞருக்கு சிறை
ADDED : ஜன 31, 2024 02:05 AM

தேனி:15 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விஜய்க்கு 19, என்பவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தேனி மாவட்டம் சாமாண்டிபுரம் உலகமுத்து மகன் விஜய். இவர் 2019 செப்., 20 ல் அப்பகுதியில் உள்ள குளத்தில் ஆடுகளை குளிப்பாட்டிக் கொண்டிருந்த 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு தந்தார். கம்பம் தெற்கு போலீசார் விஜயை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று தீர்ப்பளித்த நீதிபதி கணேசன், குற்றவாளி விஜய்க்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் தவமணிசெல்வி ஆஜரானார்.