Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ மொழி ரீதியாக ஹிந்துக்களை பிரிக்க தி.மு.க., முயற்சி எச்.ராஜா குற்றச்சாட்டு

மொழி ரீதியாக ஹிந்துக்களை பிரிக்க தி.மு.க., முயற்சி எச்.ராஜா குற்றச்சாட்டு

மொழி ரீதியாக ஹிந்துக்களை பிரிக்க தி.மு.க., முயற்சி எச்.ராஜா குற்றச்சாட்டு

மொழி ரீதியாக ஹிந்துக்களை பிரிக்க தி.மு.க., முயற்சி எச்.ராஜா குற்றச்சாட்டு

UPDATED : ஜூன் 21, 2025 05:28 AMADDED : ஜூன் 21, 2025 05:26 AM


Google News
Latest Tamil News
மதுரை: 'ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் முருகபக்தர்கள் மாநாட்டிற்கு வருவதற்கு தி.மு.க., எதிர்ப்பு தெரிவிக்கலாமா. மொழியின் ரீதியாக ஹிந்துக்களை பிரிக்க பார்க்கிறார்கள்,' என, மதுரையில் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்தார்.

மதுரையில் அறுபடை வீடுகளின் அருட்காட்சியை எச்.ராஜா நேற்று பார்வையிட்டு கூறியதாவது: ரம்ஜான் விழாவில் கடைசி நேரம் வரை திருமாவளவன் குல்லா போட்டு கொண்டு இருக்கிறார். முருகன் கோயிலில் அவர் திருநீறை அழித்ததால் இதை கூற வேண்டிய நிர்பந்தம் வந்துள்ளது.

பழநி முருகன் மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி 'ஆன்மிக மாநாடு இல்லை' என்றார். அப்படி என்றால் அது நாத்திக, தி.மு.க., மாநாடு.

முருகன் தமிழ் கடவுள் என்று கூறுபவர்கள் திருச்செந்துார் குடமுழுக்கிற்கு வருவார்களா. அரசியலில் தீயசக்திகள் இருந்தால், அதை அழிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் முருகபக்தர்கள் மாநாட்டிற்கு வருவதற்கு தி.மு.க., எதிர்ப்பு தெரிவிக்கலாமா. மொழி ரீதியாக ஹிந்துக்களை பிரிக்க பார்க்கிறார்கள். அடுத்த 9 மாதங்களுக்கு ஹிந்துக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். வரும் தேர்தலில் தக்க பதிலடி தர வேண்டும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us