Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ஒப்பந்தப்படி சம்பளம் வரவில்லை; அரசு பஸ் ஊழியர்கள் அதிருப்தி

ஒப்பந்தப்படி சம்பளம் வரவில்லை; அரசு பஸ் ஊழியர்கள் அதிருப்தி

ஒப்பந்தப்படி சம்பளம் வரவில்லை; அரசு பஸ் ஊழியர்கள் அதிருப்தி

ஒப்பந்தப்படி சம்பளம் வரவில்லை; அரசு பஸ் ஊழியர்கள் அதிருப்தி

UPDATED : ஜூன் 03, 2025 04:59 AMADDED : ஜூன் 03, 2025 04:58 AM


Google News
Latest Tamil News
சென்னை : புதிய ஊதிய ஒப்பந்தத்தின்படி, இந்த மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை என்பதால், போக்குவரத்து பணியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அரசு பஸ் ஊழியர் ஊதிய உயர்வுக்கான, 15வது ஊதிய ஒப்பந்தம், கடந்த மாதம் 29ம் தேதி கையெழுத்தானது. 6 சதவீத உயர்வு என்பதால், குறைந்தபட்சம் 1,420 ரூபாய் முதல் 6,460 ரூபாய் வரை, ஊழியர் சம்பளம் உயரும் என்றும், இந்த ஊதிய உயர்வு உடனடியாக அமலாகிறது என்றும் சொல்லப்பட்டது.

இதற்கிடையே, தமிழக போக்குவரத்து ஊழியர்கள், 1.09 லட்சம் பேருக்கு, நேற்று மாத சம்பளம், வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. பழைய சம்பளம் மட்டுமே வந்தது; புதிய ஒப்பந்தத்தின்படி சம்பளம் உயர்வு வரவில்லை.

சி.ஐ.டி.யு., மாநகர போக்குவரத்து பொதுச்செயலர் தயானந்தன் கூறியதாவது:


புதிய ஒப்பந்தத்தின்படி, இந்த மாதம் சம்பளம் உயர்வு வராதது, ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரத்தில், அரசு ஊழியர்களுக்கு 55 சதவீதம் அகவிலைப்படி உயர்வு, நான்கு மாத நிலுவையும் வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'சம்பள தேதிக்கு ஓரிரு நாட்களுக்கு முன், புதிய ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால், தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் புதிய ஊதிய ஒப்பந்தப்படி சம்பளம் வழங்கப்படும். நிலுவைத் தொகை நான்கு தவணையாக வழங்கப்படும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us