Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஆண்டாள் கோயிலில் பிரியாவிடை: இன்று எண்ணெய் காப்பு உற்ஸவம் துவக்கம்

ஆண்டாள் கோயிலில் பிரியாவிடை: இன்று எண்ணெய் காப்பு உற்ஸவம் துவக்கம்

ஆண்டாள் கோயிலில் பிரியாவிடை: இன்று எண்ணெய் காப்பு உற்ஸவம் துவக்கம்

ஆண்டாள் கோயிலில் பிரியாவிடை: இன்று எண்ணெய் காப்பு உற்ஸவம் துவக்கம்

ADDED : ஜன 08, 2024 05:24 AM


Google News
Latest Tamil News
ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பிரியாவிடை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இன்று (ஜன., 8) முதல் மார்கழி எண்ணெய் காப்பு உற்ஸவம் துவங்குகிறது.

ஆண்டாள் பாவை நோன்பு இருப்பதற்காக பெருமாளிடம் நியமனம் பெறும் பிரியா விடை நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்றிரவு 7:00 மணிக்கு ஆண்டாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாட வீதி வழியாக பெரிய பெருமாள் சன்னதி வந்தடைந்தார்.

அங்கு ஏகாந்த திருமஞ்சனம், கைத்தல சேவை முடிந்து, பெரிய பெருமாள் மூலஸ்தானத்திற்கு சேருதலும், அதனைத் தொடர்ந்து அரையர் வியாக்கியானம், பஞ்சாங்கம் வாசித்தல், பொது ஜன சேவையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இன்று முதல் ஜன., 15 முடிய மார்கழி எண்ணெய் காப்பு உற்ஸவம் நடக்கிறது.

தினமும் காலை 9:00 மணிக்கு மேல் ஆண்டாள் மாட வீதிகள் வழியாக மண்டபங்கள் எழுந்தருளி, திருமுக்குளம் எண்ணெய் காப்பு மண்டபத்தில் எழுந்தருள்கிறார்.

அங்கு மதியம் 3:00 மணிக்கு மேல் எண்ணெய் காப்பு சேவை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், பட்டர்கள் செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us