Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/எம்.எல்.ஏ., மகன், மருமகள் காவல் நீட்டிப்பு

எம்.எல்.ஏ., மகன், மருமகள் காவல் நீட்டிப்பு

எம்.எல்.ஏ., மகன், மருமகள் காவல் நீட்டிப்பு

எம்.எல்.ஏ., மகன், மருமகள் காவல் நீட்டிப்பு

ADDED : பிப் 24, 2024 12:49 AM


Google News
சென்னை:வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட தி.மு.க., - எம்.எல்.ஏ.,வின் மகன், அவரது மருமகள் ஆகியோரின் நீதிமன்ற காவலை, மார்ச் 7 வரை நீட்டித்து, சென்னை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக, சென்னை பல்லாவரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி மகன் ஆன்டோ மதிவாணன், அவரது மனைவி மார்லினா ஆகியோர் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகளில், திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆந்திராவில் தலைமறைவாக இருந்த இருவரையும், கடந்த மாதம் 25ல் தனிப்படை போலீசார் கைது செய்து, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இருவரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவு பெற்றதை அடுத்து, புழல் சிறையில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, சென்னை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் முன், போலீசார் ஆஜர்படுத்தினர்.

அப்போது இருவரின் நீதிமன்ற காவலையும், மார்ச் 7 வரை நீட்டித்து, நீதிபதி ஆனந்த் உத்தரவிட்டார். ஜாமின் கேட்டு, இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, வரும் 26க்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us