Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ திருவண்ணாமலையில் 'எபிக்ஸ்கேஷ்' 100வது கிளை

திருவண்ணாமலையில் 'எபிக்ஸ்கேஷ்' 100வது கிளை

திருவண்ணாமலையில் 'எபிக்ஸ்கேஷ்' 100வது கிளை

திருவண்ணாமலையில் 'எபிக்ஸ்கேஷ்' 100வது கிளை

ADDED : செப் 07, 2025 01:33 AM


Google News
Latest Tamil News
சென்னை:' எராயா லைப் ஸ்பேஸஸ் லிமிடெட்' நிறுவனத்தின் துணை நிறுவனம் மற்றும் வெளிநாட்டு நாணய மாற்றம் மற்றும் 'அவுட்வர்ட் ரெமிடன்ஸ்' சேவைகளில் முன்னணி நிறுவனமா க விளங்கும், 'எபிக்ஸ்கேஷ் வேர்ல்டு மணி லிமிடெட்' நிறுவனம், தன், 100வது கிளையை, திருவண்ணாமலையில் துவக்கியுள்ளது.

வெறும் எண் அல்ல துவக்க விழாவில், திருவண்ணாமலை டவுன் உதவி காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்த புதிய கிளை, சில்லரை வர்த்தகர்கள், சுற்றுலா பயணியர், வெளிநாடுகளுக்கு கல்வி பயிலச் செல்லும் மாணவர்கள், கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள் உள்ளிட்டோருக்கு முழுதுமான வெளிநாட்டு நாணய சேவைகளை வழங்கும்.

இதில், நாணய மாற்றம், முன்பணம் ஏற்றப்பட்ட, 'பாரெக்ஸ் கார்டு'கள், சர்வதேச பயண நாணய தீர்வுகள் அடங்கும்.

இதுகுறித்து, 'எபிக்ஸ்கேஷ்' - கட்டணம் தொடர்பான தீர்வுகளின் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் குருபிரசாத் கூறுகையில், “100வது கிளை என்ற மைல்கல்லை எட்டுவது வெறும் எண் அல்ல.

நம்பிக்கை ''இது, கோடிக் கணக்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும், நாட்டின் பல பகுதிகளில் உழைக்கும் எங்கள் குழுக்களின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது,” என்றார்.

திரு வண்ணாமலையில், 'எபிக்ஸ்கேஷ்' நிறுவனத்தின் , 100வது கிளை துவக்க விழா நடந்தது. இடமிருந்து : பிற மாநிலங்களுக்கான உதவி இணை தலைவர் சுரேஷ்குமார், தமிழகத்திற்கான துணை இணை தலைவர் ஸ்ரீராமன், கிளை மேலாளர் ஆனந்த் குருராஜன், நிர்வாக இயக்குநர் குருபிரசாத், செயல் இயக்கு நர் ஹரிபிரசாத், விளம்பர மேம்பாட்டு ஆலோசகர் ஆர்.பி.ஷெட்டி, உதவி இணை தலைவர் ஷாலியா.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us