புதிய கதவணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி இழுபறி கொள்ளிடம் ஆற்றில் காவிரி நீர் வீணடிப்பு
புதிய கதவணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி இழுபறி கொள்ளிடம் ஆற்றில் காவிரி நீர் வீணடிப்பு
புதிய கதவணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி இழுபறி கொள்ளிடம் ஆற்றில் காவிரி நீர் வீணடிப்பு

முடிந்துள்ளன
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் அதிக நீர் திறக்கப்படும் போது, கொள்ளிடம் ஆற்றின் வழியாக பாதுகாப்பாக கடலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றில் கதவணைகளை கட்டி நீரை சேமிக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
உபரிநீர் திறப்பு
கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், கதவணையில் நீர் சேமிக்கும் பணிகள் இன்னும் துவக்கப்படவில்லை. கர்நாடகா மாநிலத்தில் கொட்டி தீர்க்கும் மழையால், அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. அவற்றில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால், மேட்டூர் அணையும் நிரம்பியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு, 50,000 கன அடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் கூறியதாவது:
சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமல், ஆதனுார் - குமாரமங்கலம் கதவணை கட்டும் பணிகள் துவங்கப்பட்டன. சுற்றுச்சூழல் துறை அனுமதி வேண்டி, நீர்வளத்துறை மூலமாக, மத்திய அரசின் பரிவேஷ் இணையதளத்தில், 2024 டிசம்பர் மாதம் விண்ணப்பம் செய்யப்பட்டது; இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி பெறுவதற்கான முயற்சிகளையும் நீர்வளத் துறையினர் எடுக்கவில்லை.