ADDED : மே 15, 2025 02:49 AM
அவலுார்பேட்டை: வளத்தி அருகே குளவிகள் கொட்டியதில் முதியவர் இறந்தார்.
வளத்தி அடுத்த துறிஞ்சிப்பூண்டி கிராமத்தை சேர்ந்த ராமர், 62; இவருடைய நிலத்திலிருந்த பனைமரத்தில் நேற்று முன்தினம் பனங்காய் வெட்டினார். அப்போது, திடீரென கூட்டமாய் வந்த விஷக்குளவிகள் ராமரை கொட்டியது. வலியுடன் துடித்த ராமரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். வளத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


