Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/போதைப்பொருள் விவகாரம்: நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை

போதைப்பொருள் விவகாரம்: நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை

போதைப்பொருள் விவகாரம்: நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை

போதைப்பொருள் விவகாரம்: நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை

ADDED : ஜூன் 25, 2025 09:13 PM


Google News
சென்னை: போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவிடம் ஆயிரம் விளக்கு போலீஸ் ஸ்டேசனில் விசாரணை நடந்து வருகிறது.

போதைப்பொருள் விநியோகித்ததாக பிரதீப் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் அளித்த தகவலின் பேரில், நடிகர் ஸ்ரீகாந்த்(46) கைது செய்யப்பட்டார். அவர் போதைப்பொருளான கோகைன் பயன்படுத்தியது மற்றும் வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது ஸ்ரீகாந்த் புழல் மத்திய சிறையில் முதல் வகுப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு உள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். அதற்கு அவர் ஆஜராகாத காரணத்தினால், அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து இருந்தனர்.இந்நிலையில், கேரளாவில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய கிருஷ்ணா, வழக்கறிஞர் குழுவுடன் போலீசார் முன்பு ஆஜரானார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதீப் உடனான உறவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விசாரணை நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us