Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி: நீதிமன்றம் உத்தரவு

செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி: நீதிமன்றம் உத்தரவு

செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி: நீதிமன்றம் உத்தரவு

செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி: நீதிமன்றம் உத்தரவு

ADDED : ஜூலை 08, 2024 05:27 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் வங்கி ஆவணங்களை வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மூன்று புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இந்த மனுக்கள் இன்று(ஜூலை 08) விசாரணைக்கு வந்தது.

வங்கி தொடர்பான ஆவணங்களை வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை நீதிபதி அல்லி தள்ளுபடி செய்தார். கரூர் சிட்டி யூனியன் வங்கி கிளையின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை செந்தில்பாலாஜி தரப்பிற்கு வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டார். அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவில், செந்தில் பாலாஜி தரப்பு வாதத்திற்காக விசாரணையை ஜூலை 10ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

காவல் நீட்டிப்பு

இதற்கிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 44வது முறையாக, ஜூலை 10ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us