ராமேஸ்வரம் கோயிலில் குவிந்தனர் பக்தர்கள்
ராமேஸ்வரம் கோயிலில் குவிந்தனர் பக்தர்கள்
ராமேஸ்வரம் கோயிலில் குவிந்தனர் பக்தர்கள்
ADDED : மே 19, 2025 03:08 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பள்ளி கோடை விடுமுறையை முன்னிட்டு நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து இக்கோயிலுக்கு பக்தர்கள் வந்தனர். அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர் ஆன்மா சாந்தியடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்து கடலில் புனித நீராடினர்.
பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினர். இதைத்தொடர்ந்து சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் வருகையால்ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் திட்டக்குடி, கோயில் அக்னி தீர்த்த கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


