ADDED : பிப் 06, 2024 02:14 AM
சென்னை,: இந்திய தேர்தல் கமிஷனின், துணை தேர்தல் கமிஷனர் அஜய்படூ, தேர்தல் கமிஷன் முதன்மை செயலர் மலாய்மாலிக் ஆகியோர் தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இன்று சென்னை வருகின்றனர்.
இன்று மதியம் 12:00 முதல் 1:30 மணி வரை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு மற்றும் தேர்தல் அலுவலர்களை சந்தித்து பேசுகின்றனர்.
மதியம் 2:30 முதல் மாலை 5:30 மணி வரை தேர்தல் பணியில் ஈடுபடும் முகமை அலுவலர்கள் உடனான கூட்டம் தலைமை செயலகத்தில் நடக்க உள்ளது. நாளை காலை 9:30 முதல் மாலை 6:30 மணி வரை, மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் வழியே ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது.