Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ கால்நடை ஆய்வாளர் பணிக்கு டிகிரி அவசியம்

கால்நடை ஆய்வாளர் பணிக்கு டிகிரி அவசியம்

கால்நடை ஆய்வாளர் பணிக்கு டிகிரி அவசியம்

கால்நடை ஆய்வாளர் பணிக்கு டிகிரி அவசியம்

ADDED : செப் 08, 2025 01:54 AM


Google News
Latest Tamil News
சென்னை: கால்நடை பராமரிப்பு துறையில், கால்நடை ஆய்வாளர் பணிக்கு, இனி பட்டப்படிப்பு அவசியம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை ஆய்வாளர் பணியில் சேர, பிளஸ் 2 முடித்தவர்கள், 11 மாதங்கள் அத்துறையில் ஊதியம் இல்லாமல் பயிற்சி பெற வேண்டும்.

அதில், தகுதியானோருக்கு, ஆய்வாளர் பணி நேரடி நியமனம் வாயிலாக வழங்கப்பட்டது. அவர்கள் ஐந்தாண்டு பணி முடித்த பின், நிலை - 2 பதவி உயர்வு வழங்கப்பட்டது.

தற்போது, நேரடி நியமனம் ரத்து செய்யப் பட்டுள்ளதால், இனி இந்த பணியில் சேர, பிளஸ் 2 வகுப்பில் தாவரவியல், விலங்கியல் பாடங்களை படித்திருப்பதுடன், பட்டப்படிப்பையும் முடித்து இருக்க வேண்டும்.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும். இதற்காக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us