சீரழிக்கப்படும் கோவில்கள் ஹிந்து முன்னணி புகார்
சீரழிக்கப்படும் கோவில்கள் ஹிந்து முன்னணி புகார்
சீரழிக்கப்படும் கோவில்கள் ஹிந்து முன்னணி புகார்
ADDED : பிப் 11, 2024 12:54 AM

திருப்பூர்:ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வராசுப்ரமணியம் அறிக்கை:
இரு நாட்களுக்கு முன், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது. கோவிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தும் வேலை செய்யவில்லை.
தொன்மை வாய்ந்த இக்கோவிலில் காவலாளி கூட நியமிக்கவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதே கோவிலில் ஒரு வாரம் முன், இரு வாலிபர்கள் ஆபாச பாடலுக்கு குத்தாட்டம் போட்டனர்.
பக்தர்களின் எதிர்ப்புவந்த பின்,இதற்காக நிர்வாகம்மன்னிப்பு கேட்டது. சில நாட்களுக்கு முன், இதே கோவிலில் இஸ்லாமியர் உள்ளே சென்று மொபைல் போனில் வீடியோ எடுத்ததும் சர்ச்சையாகியது.
கோவிலைக் காக்கதொடர்ந்து குரல் கொடுத்து வரும் முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல், பக்தர்களோடு கோவில் மண்டபத்தில்அமர்ந்து பேசக்கூடாது என்று கோவில் நிர்வாகம் தடை செய்துள்ளது.
இப்படி பக்தர்களை வேதனைப்படுத்தும் செயலில் இந்த அரசு செயல்படுகிறது.
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக கடவுள் நம்பிக்கை இல்லாத தி.மு.க., ஆட்சியால், கோவில்கள் சீரழிக்கப்படுகின்றன; பக்தர்கள்பயமுறுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு அவர்கூறியுள்ளார்.