Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு விதித்த சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு விதித்த சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு விதித்த சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு விதித்த சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

ADDED : ஜூன் 12, 2025 12:09 PM


Google News
Latest Tamil News
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளான ஐ.ஏ.எஸ்., அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு, விதிக்கப்பட்ட ஒரு மாதம் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செயல்படுத்தப்படாததை தொடர்ந்து சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணைய அதிகாரியாக இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி அன்சுல் மிஸ்ரா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அவர் தற்போது தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண் இயக்குநராக இருக்கிறார்.

விசாரித்த சென்னை ஐகோர்ட், அன்சுல் மிஸ்ராவுக்கு, ஒரு மாத சிறை தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி, '' பாதிக்கப்பட்ட மனுதாரர்களுக்கு, 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

இந்த தொகையை, அன்ஷுல் மிஸ்ராவின் ஊதியத்தில் அரசு பிடித்தம் செய்ய வேண்டும்' என ஐகோர்ட் நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து அன்ஷுல் மிஸ்ரா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், இன்று (ஜூன் 12) ஐ.ஏ.எஸ்., அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு, விதிக்கப்பட்ட ஒரு மாதம் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அவருக்கு விதிக்கப்பட்ட 25,000 ரூபாய் அபராத தொகையை 3 வாரங்களுக்குள் டெபாசிட் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us