லோக்சபா தேர்தலில் போட்டி அமைச்சர் நேரு மகன் பேட்டி
லோக்சபா தேர்தலில் போட்டி அமைச்சர் நேரு மகன் பேட்டி
லோக்சபா தேர்தலில் போட்டி அமைச்சர் நேரு மகன் பேட்டி
ADDED : பிப் 24, 2024 02:32 AM
திருச்சி:''தொகுதியை தலைமை முடிவு செய்யும்,'' என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு மகன் அருண் கூறினார்.
அமைச்சர் நேருவின் மகன் அருண், வரும் லோக்சபா தேர்தலில், பெரம்பலுார் தொகுதியில் போட்டியிடுவது உறுதி என, கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது.
அவர், திருச்சி தொகுதியிலும் போட்டியிடலாம் என்ற பேச்சும் பரவலாக உள்ளது. இந்நிலையில், பொதுப்பணித் துறை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நேரு மகன் அருண் நிருபர்களிடம் கூறியதாவது:
லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் தெரிவிப்பேன். எந்த தொகுதி என்பதை, கட்சி தலைமை முடிவெடுக்கும். இந்த விஷயத்தில் கட்சி தலைமையின் முடிவே இறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.