Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நடிகர், நடிகையருக்கு 'கோகைன்' சப்ளை: பிரசாத் பின்னணி குறித்து போலீஸ் தகவல்

நடிகர், நடிகையருக்கு 'கோகைன்' சப்ளை: பிரசாத் பின்னணி குறித்து போலீஸ் தகவல்

நடிகர், நடிகையருக்கு 'கோகைன்' சப்ளை: பிரசாத் பின்னணி குறித்து போலீஸ் தகவல்

நடிகர், நடிகையருக்கு 'கோகைன்' சப்ளை: பிரசாத் பின்னணி குறித்து போலீஸ் தகவல்

ADDED : ஜூன் 25, 2025 08:56 AM


Google News
Latest Tamil News
சென்னை: திரைப்பட தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த அ.தி.மு.க., முன்னாள் நிர்வாகி பிரசாத், நடிகர், நடிகையரை போதைக்கு அடிமையாக்கி, அவர்களிடம் இருந்து பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையை சேர்ந்தவர் பிரசாத், 33. அ.தி.மு.க.,வில், தென் சென்னை கிழக்கு மாவட்ட தொழில்நுட்ப அணி துணை செயலராக இருந்தார். கடந்த மாதம் 22ம் தேதி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, 'பார்' ஒன்றில் ரகளை செய்து, கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

இவரின் மொபைல் போனை ஆய்வு செய்த போலீசார், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் பிரசாத் தொடர்பில் இருப்பதை கண்டறிந்தனர்.

பண மோசடி

பிரசாத் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: பிரசாத்தின் நட்பு வட்டத்தில், கட்டப்பஞ்சாயத்து பேர்வழிகள், அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்யும் கும்பலை சேர்ந்தோர், ஆள் கடத்தலில் ஈடுபடும் ரவுடிகள், தொழில் அதிபர்களிடம் பணம் பறிக்க உதவி செய்யும் போலீசார், நடிகர், நடிகையர் என, பெரும் பட்டாளமே உள்ளது.

பிரசாத்தின் மொபைல் போன், மடிக்கணினி உள்ளிட்ட 'டிஜிட்டல்' ஆவணங்களை ஆய்வு செய்ததில், அவர், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருப்பதும் தெரியவந்தது. அக்கும்பலை சேர்ந்த சேலம் மாவட்டம் சங்ககிரி பிரதீப்குமார், கானா நாட்டைச் சேர்ந்த ஜான் ஆகியோரையும் கைது செய்துள்ளோம்.

இவர்களின் கூட்டாளிகள் கர்நாடக மாநிலம், பெங்களூரில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. சினிமா படங்கள் தயாரிப்பு தொழிலில், பிரசாத் ஈடுபட்டுள்ளார். அவருக்கு, சென்னையை சேர்ந்த அ.தி.மு.க., முக்கிய புள்ளி நிதியுதவி செய்துள்ளார். சினிமா நடிகர், நடிகையர் பங்கேற்கும் இரவு விருந்து, பண்ணை வீடுகள் மற்றும், 'பப்'களில், பார்ட்டிகளுக்கு ஏற்பாடு செய்வதும் இவரது வழக்கம்.

அதில் பங்கேற்பவர்களுக்கு, 'கோகைன்' கொடுத்து, போதையில் மிதக்க விடுவதே இவரது வேலை. சினிமா நடிகர், நடிகையரை போதைக்கு அடிமையாக்கி, அவர்களை மிரட்டி பணம் பறிப்பது, படங்களில் நடிக்க, 'கால்ஷீட்' பெறும் செயலிலும் ஈடுபட்டுள்ளார். இவரிடம், கோகைன் போதை பொருள் வாங்கி பயன்படுத்தியதுடன், வீட்டில் வைத்திருந்த நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரசாத் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரிடம், கோகைன் வாங்கிய நடிகை ஒருவரும், மற்றொரு நடிகரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

'சம்மன்'

இந்நிலையில், ஸ்ரீகாந்திடம் கோகைன் வாங்கிய, கழுகு பட நடிகர் கிருஷ்ணா விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, சம்மன் அனுப்பி உள்ளோம். அவர் தலைமறைவாக இருப்பதால் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us