Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ கவர்னர் மாளிகை பெயர் மாற்றம்  முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

 கவர்னர் மாளிகை பெயர் மாற்றம்  முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

 கவர்னர் மாளிகை பெயர் மாற்றம்  முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

 கவர்னர் மாளிகை பெயர் மாற்றம்  முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

ADDED : டிச 01, 2025 12:45 AM


Google News
சென்னை: 'கவர்னர் மாளிகையின் பெயரை, 'மக்கள் மாளிகை' என மாற்றுவதை விட, சிந்தனை மாற்றமே தேவை' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அனைத்து மாநிலங்களிலும், கவர்னர் மாளிகைகள், 'ராஜ்பவன்' என்ற பெயரிலும், யூனியன் பிரதேசங்களில், 'ராஜ் நிவாஸ்' என்ற பெயரிலும் அழைக்கப்பட்டு வந்தன.

கடந்த ஆண்டு டில்லியில் கவர்னர்கள் மாநாடு நடந்தது. அதில் பேசிய, தமிழக கவர்னர் ரவி, 'கவர்னர் மாளிகை' பெயரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதை ஏற்று, ராஜ்பவன் என்பதற்கு பதிலாக, 'லோக்பவன்' என்றும், யூனியன் பிரதேசங்களில், 'லோக் நிவாஸ்' என்றும் கவர்னர் மாளிகை பெயரை மாற்றி, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி, தமிழக கவர்னர் மாளிகை இனி, 'மக்கள் மாளிகை' என்று அழைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின், தன் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பெயர் மாற்றத்தை விட, சிந்தனை மாற்றமே தேவை. சட்டசபை என்றால் மக்கள் சபை. சட்டசபையை மதிக்காதவர்கள், 'மக்கள் மாளிகை' என பெயர் மாற்றுவது கண்துடைப்பு.

மக்களாட்சி தத்துவத்தின் கண்களில், மண்ணை துாவும் செயல். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளையும், மக்களின் விருப்பத்தையும் நிறைவேற்ற, இறையாண்மையுள்ள சட்டசபையை மதிப்பது தான், இப்போதைய தேவை.

சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லை யெனில், இதுவும் தேவையற்றதே.

இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us