Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ புதிதாக 4 அரசு கல்லுாரிகள் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

புதிதாக 4 அரசு கல்லுாரிகள் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

புதிதாக 4 அரசு கல்லுாரிகள் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

புதிதாக 4 அரசு கல்லுாரிகள் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ADDED : மே 31, 2025 07:07 AM


Google News
சென்னை: 'நடப்பு கல்வியாண்டில், மேலும் நான்கு புதிய அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் துவக்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நடப்பு கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில், கடலுார் மாவட்டம் பண்ருட்டி; நீலகிரி மாவட்டம் குன்னுார்; திண்டுக்கல் மாவட்டம் நத்தம்; சென்னை மாவட்டம் ஆலந்துார்; விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி; செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை; திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை; தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார்; பெரம்பலுார் மாவட்டம் பெரம்பலுார், துாத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஆகிய 11 இடங்களில், புதிய கலை அறிவியல் கல்லுாரிகளை முதல்வர் ஸ்டாலின், கடந்த மாதம் 26ம் தேதி துவக்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து வந்த கோரிக்கைகள் அடிப்படையில், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில், மேலும் நான்கு புதிய அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளை துவக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால், இப்பகுதியை சேர்ந்த 1,120 மாணவர்கள் உயர் கல்வி பெறுவர்.

புதிதாக கல்லுாரிகள் துவக்கப்படும் மாவட்டம் மற்றும் ஊர்:

1. வேலுார் மாவட்டம் - கே.வி.குப்பம்2. திருச்சி மாவட்டம் - துறையூர்3. கள்ளக்குறிச்சி மாவட்டம் - உளுந்துார்பேட்டை4. திருவண்ணாமலை மாவட்டம் - செங்கம்



புதிதாக கல்லுாரிகள் துவக்கப்படும் மாவட்டம் மற்றும் ஊர்:

1. வேலுார் மாவட்டம் - கே.வி.குப்பம்2. திருச்சி மாவட்டம் - துறையூர்3. கள்ளக்குறிச்சி மாவட்டம் - உளுந்துார்பேட்டை4. திருவண்ணாமலை மாவட்டம் - செங்கம்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us