4 நாட்கள் கழித்து மீண்டும் விலை உயர்ந்த ஆபரணத் தங்கம்!
4 நாட்கள் கழித்து மீண்டும் விலை உயர்ந்த ஆபரணத் தங்கம்!
4 நாட்கள் கழித்து மீண்டும் விலை உயர்ந்த ஆபரணத் தங்கம்!
ADDED : ஜன 08, 2025 11:34 AM

சென்னை; சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்றே உயர்ந்துள்ளது.
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. அந்த வகையில் இந்தாண்டின் முதல் மாதத்தின் 8ம் நாளான இன்று (ஜன.8) தங்கம் விலையில் மாற்றம் காணப்படுகிறது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.7225 ஆக இருக்கிறது. ஒரு சவரன் ரூ.57,800 ஆக விற்பனையாகிறது.
கடந்த ஒரு வாரத்தில் (ஜன.1 முதல் ஜன.7 வரை) தங்கம் விலை நிலவரம்;
01/01/2025 - ரூ.57,200
02/01/2025 - ரூ.57,440
03/01/2025 - ரூ.58,720
04/01/2025 - ரூ. 57,720
05/01/2025 - ரூ. 57,720
06/01/2025 - ரூ. 57,720
07/01/2025 - ரூ. 57,720