Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில்

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில்

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில்

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில்

ADDED : ஜன 12, 2024 11:30 PM


Google News
சென்னை:கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சென்னை எழும்பூர் - நாகர்கோவிலுக்கு இன்றும், நாளையும் வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை எழும்பூரில் இருந்து இன்றும், நாளையும் காலை, 5:00 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில், அதேநாளில் மதியம் 1:45 மணிக்கு நாகர்கோவில் செல்லும்

நாகர்கோவிலில் இருந்து இன்றும், நாளையும் மதியம் 2:25 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் அதேநாளில் இரவு 11:25 மணிக்கு எழும்பூர் வரும்.

இந்த சிறப்பு ரயில்கள், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலியில் நின்று செல்லும்.

மேற்கண்ட சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us