தென் மாவட்டங்களில் இரண்டு நாள் மழைக்கு வாய்ப்பு
தென் மாவட்டங்களில் இரண்டு நாள் மழைக்கு வாய்ப்பு
தென் மாவட்டங்களில் இரண்டு நாள் மழைக்கு வாய்ப்பு
ADDED : பிப் 12, 2024 06:35 AM

சென்னை : தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில், நாளை முதல் இரண்டு நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த ஒரு வாரமாக தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவுகிறது. நாளை முதல் இரண்டு நாட்களுக்கு, தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்காலிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும்; அதிகபட்சம், 32 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். மாநிலம் முழுதும், பகல் நேர வெப்பநிலை சற்று அதிகரிக்கும்; அதிகாலையில் லேசான பனி மூட்டம் நிலவும்.
குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு, 65 கி.மீ., வேகம் வரை சூறாவளி காற்று வீசுவதால், அந்த பகுதிக்கு இரண்டு நாட்கள் மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.