Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

UPDATED : மே 31, 2025 04:57 PMADDED : மே 31, 2025 02:30 PM


Google News
Latest Tamil News
சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரியில் இயல்பை விட கூடுதல் மழை பொழிவு பதிவாகியுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், அதன் தாக்கம் தமிழகத்தில் இருந்து வருகிறது. கடந்த சில தினங்களாக கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் சில மாவட்டங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் இன்றும், நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் மழை


கடந்த மார்ச் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு இருந்துள்ளது. அதிகபட்சமாக குமரியில் 27.2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, நீலகிரியில் 21.2 செ.மீ., தேனி, திண்டுக்கல்லில் தலா 17 செ.மீ., மழையும், கோவையில் 16.1 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us